என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை வழியாக 6 சிறப்பு ெரயில்கள் இயக்கம்
    X

    கோவை வழியாக 6 சிறப்பு ெரயில்கள் இயக்கம்

    • ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளது.
    • கோவைரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

    கோவை,

    கோவை ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக 6 சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், திருவனந்தபுரம்-ஐ தராபாத் இடையிலான சிறப்பு ெரயில் (எண்: 07120), வருகிற 10-ந் தேதி இரவு 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, 12-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு ஐதராபாத் சென்றடையும். இந்த ெரயில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ெரயில்நி லையங்களில் நின்று செல்லும்.

    கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் - கேரள மாநிலம் கொல்லம் இடையிலான சிறப்பு ெரயில் (06501), யஷ்வந்த்பூரில் இருந்து நாளை (7-ந் தேதி) பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

    கொல்லம் - யஷ்வந்த்பூர் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:06502), கொல்லத்தில் இருந்து வரும் 8-ந் தேதி காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 10 மணிக்கு யஷ்வந்த்பூர் சென்றடையும். இந்த ெரயில்கள், கோவை, திருப்பூர். ஈரோடு, சேலம், கிருஷ்ணராஜபுரம் ெரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

    சென்னை சென்ட்ரல் எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:06053), சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை (7-ந் தேதி) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 12.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    எர்ணாகுளம் - சென்னை சென்ட்ரல் இடையிலான சிறப்பு ெரயில் (06054), எர்ணாகுளத்தில் இருந்து வரும் 9-ந் தேதி பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையம் சென்றடையும். இந்த ெரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    நெல்லை -பெங்களூர் கன்டோன்மென்ட் இடையிலான சிறப்பு ெரயில் (எண்:06052), நெல்லையில் இருந்து வரும் 10-ந் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு பெங்களூர் கன்டோன்மென்ட் ெரயில் நிலையம் சென்றடையும்.

    இந்த ெரயில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருபேட், கிருஷ்ணராஜபுரம் ெரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×