என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட வேன்.
கயத்தாறில் வேனில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- வேனை சோதனையிட்டதில் 500 கிலோ ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
- வேனை ஓட்டி வந்த நெல்லை தாழையூத்தை சேர்ந்த இலங்காமணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை சோதனையிட்டனர். அதில் 15 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
வேனை ஓட்டி வந்த நெல்லை தாழையூத்தை சேர்ந்த இலங்காமணி (வயது 49) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வில்லிசேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசி வாங்கி சென்றதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story