search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கசிவால் தீ விபத்து- பண்ணையில் இருந்த 4000 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு
    X

    மின்கசிவால் தீ விபத்து- பண்ணையில் இருந்த 4000 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு

    • ராஜாங்கம் தனது வீட்டிற்கு அருகே கோழிப்பண்ணை வைத்துள்ளார்.
    • ராஜாங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள மூணான்டிபட்டியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் தனது வீட்டிற்கு அருகே கோழிப்பண்ணை வைத்துள்ளார். இன்றுகாலை பண்ணையில் மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென பரவி பண்ணை முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

    ராஜாங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 4000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து தேவாரம் போலீசில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து சேதமதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

    Next Story
    ×