என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருதரப்பினர் மோதலில் 4 பேர் கைது
    X

    இருதரப்பினர் மோதலில் 4 பேர் கைது

    • இதில் பிரேம்குமாரை வாசு, புகழ் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
    • போலீசார் பிரேம்குமார், சின்ராஜ், வாசு, புகழ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்துள்ள டி.ஜி.துர்க்கம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது24). இவரது நண்பர் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக குருபரப்பள்ளியை சேர்ந்த வாசு, புகழ் ஆகியோருடன் எண்ணேக்கொள்புதூர் பகுதி ஆற்றங்கரையோரம் சென்றனர்.

    அங்கு பிரேம்குமார், வாசு, புகழ், சின்ராஜ் ஆகியோரு க்குள் தகராறு ஏற்பட்டது. இதில் பிரேம்குமாரை வாசு, புகழ் ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

    இது குறித்து இருதரப்பினர்கள் குருபரப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் போலீசார் பிரேம்குமார், சின்ராஜ், வாசு, புகழ் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    Next Story
    ×