என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாட்டரி, குட்கா விற்ற 4 பேர் கைது
    X

    லாட்டரி, குட்கா விற்ற 4 பேர் கைது

    • தேன்கனிக்கோட்டை போலீசார் ஆட்டோ ஸ்டேண்டு பகுதியில் ரோந்து சென்றனர்.
    • லாட்டரி சீட்டுக்கள் விற்ற முபாரக் (22) என்பவரை கைது செய்தனர்

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீசார் கொசமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்ற காவேரிப்பட்டணம் சந்தபாளையத்தைச் சேர்ந்த காவேரி (45) என்பவரை கைது செய்தனர்.

    அதே போல தேன்கனிக்கோட்டை போலீசார் ஆட்டோ ஸ்டேண்டு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுக்கள் விற்ற தேன்கனிக்கோட்டை மேல் வீதியை சேர்ந்த முபாரக் (22) என்பவரை கைது செய்தனர்.

    மாவட்டத்தில் எங்கும் குட்கா விற்பனை நடைபெறுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் குட்கா விற்பனை செய்த ஓசூர் எலசகிரி சத்யஜித் ராய் (32), கிருஷ்ணப்பள்ளி கோவிந்தசாமி (47) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×