search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணம் பகுதியில் 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
    X

    காவேரிப்பட்டணம் பகுதியில் 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    • காவேரிப்பட்டணத்தில் உள்ள, 100-க்கும் மேற்பட்ட கடைகளில் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
    • 4 கிலோ அளவிலான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதி கடைகளில், தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என கடந்த வாரத்தில் காவேரிப்பட்டணம் பேருராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இது குறித்து கடைகள் தோறும் நோட்டீஸ் வழங்கியும், ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் நேற்று காவேரிப்பட்டணத்தில் உள்ள, 100-க்கும் மேற்பட்ட கடைகளில் செயலாளர் செந்தில்குமார், இளங்கோ, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி செயற்பொறியாளர், மற்றும் அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

    இதில் சுமார், 4 கிலோ அளவிலான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளிலிருந்து, 7,500 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டது.

    Next Story
    ×