என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
- போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- அத்திகானூர் சிவன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள அத்திகானூர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அத்திகானூர் சிவன் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லோகதாசன், மகேந்திரன், சந்தோஸ், பிரகாஷ் ஆகிய 4 பேர் என்பது ெதரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேரை கைது செய்தனர்.
Next Story






