என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
- மதுக்கடையின் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது.
- 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் வந்தபள்ளம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள அரசு மதுக்கடையின் பின்புறம் பணம் வைத்து சூதாடுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றபோது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 4 பேர் போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் (42), துர்வாசன் (42), மாதப்பன் (49), குமரேசன் (46) என்பது தெரிய வந்தது.
4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சூதாட பயன்படுத்திய சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
Next Story






