என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பணகுடி அருகே டிரைவர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை
- பணகுடியை அடுத்த தெற்கு பெருங்குடியை சேர்ந்தவர் முருகன். வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
- வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த அவர் பணகுடி போலீசில் புகார் அளித்தார்.
பணகுடி:
பணகுடியை அடுத்த தெற்கு பெருங்குடியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் முருகன். இவர் வெளிநாட்டில் டிரைவராக வேலைபார்த்து வருகிறார்.
தற்போது விடுமுறைக்காக அவர் ெசாந்த ஊருக்கு வந்துள்ளார். கடந்த 7-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர்களை பார்ப்பதற்காக முருகன் சென்னை சென்றுள்ளார்.
இன்று காலை வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் பணம் காணாமல் போயிருந்தது.
வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்த அவர் பணகுடி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர்.
மோப்பநாய் உதவியுடன் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்