என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீட்டில் அனுமதியின்றி 30 கிலோ பட்டாசுகள் வைத்து இருந்தவர் சிக்கினார்
- வீட்டில் 30 கிலோ பட்டாசுகள் அனுமதி யின்றி இருந்ததது தெரியவந்தது.
- பட்டாசு களை வைத்து இருந்ததாக நவுசாத்தை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே சென்னசந்திரத்தில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் அனுமதியின்றி வைத்தி ருபபதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
அதில் நவுசாத் (வயது 36) என்பவரின் வீட்டில் 30 கிலோ பட்டாசுகள் அனுமதி யின்றி இருந்ததது தெரியவந்தது.
இதையடுத்து பட்டாசு களை வைத்து இருந்ததாக நவுசாத்தை போலீசார் கைது செய்தனர்.
Next Story






