என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியை உள்பட 3 பெண்கள் மாயம்
- அதே பகுதியை சேர்ந்த அபூர்வன் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக சீனிவாசன் சிப்காட் போலீசில் புகார் செய்துள்ளார்.
- சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கிருஷ்ணப்பா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
கடந்த 16-ந்தேதி வீட்டை விட்டு சென்ற அந்த மாணவி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதியை சேர்ந்த சின்னா என்பவர் கடத்தி சென்று விட்டதாக பிரபு ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பேகைபள்ளி எழில் நகரை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகள் நித்யா (21) என்பவர் கடந்த 16-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
அவரை அதே பகுதியை சேர்ந்த அபூர்வன் என்பவர் கடத்தி சென்றுவிட்டதாக சீனிவாசன் சிப்காட் போலீசில் புகார் செய்துள்ளார்.
இதேபோல போச்சம்பள்ளி அருகேயுள்ள குள்ளனூர் பகுதியை சேர்ந்த அருள்மூர்த்தி என்பவரது மனைவி சித்ரா (38). இவர் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அருள்மூர்த்தி போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போனவர்களை தேடி வருகின்றனர்.






