

களக்காடு:
களக்காடு அருகே உள்ள மூங்கிலடி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 53). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மாசானசாமி கோவிலில் நடந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் களக்காடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.