search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருசநாடு அருகே மான் வேட்டையாடிய 3 பேர் கைது
    X

    மான்வேட்டையில் ஈடுபட்டு கைதானவர்களை படத்தில் காணலாம்.

    வருசநாடு அருகே மான் வேட்டையாடிய 3 பேர் கைது

    • வனப்பகுதியில் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்த 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருச நாடு வனச்சரகத்திற்கு ட்பட்ட ஐந்தரைப்புலி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வருசநாடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் தர்மன் வனக்காப்பாளர் கமலேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது ஐந்தரைப்புலி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்த தேக்கம்பட்டியை சேர்ந்த சுந்தர் (வயது 40), பொம்மையக்கவுண்ட ன்பட்டியை சேர்ந்த ஆசை த்தம்பி (42), ஐந்தரைபுலியைச் சேர்ந்த முருகன் (48) ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 5 கிலோ அளவில் கடமான் கறியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தலை மறைவாக உள்ள மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×