search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லேத் பட்டறை உரிமையாளரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது
    X

    லேத் பட்டறை உரிமையாளரை கத்தியால் வெட்டிய 3 பேர் கைது

    • பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
    • முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் 3 பேரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 46). இவர் பள்ளப்பட்டி உடையார் காடு பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த ஜனவரி 25-ந் தேதி இவரது பட்டறைக்கு தலையில் ஹெல்மெட் மற்றும் கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு வந்த 3 மர்ம நபர்கள், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் பாஸ்கர் மற்றும் அவருடன் இருந்த செவ்வாபேட்டை நரசிம்மன்செட்டி தெருவை சேர்ந்த சிவகுமார் (44), கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சாரதி (18) ஆகிய 3 பேரையும் மூவரையும் சாரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

    படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இன்று காலை பாஸ்கர் உள்ளிட்டோரை வெட்டிய சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து பரத் (23), இதே பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் மகன் சாமுவேல் (20), விஜயகுமார் மகன் பாலமுருகன் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×