என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புகைப்பட கலைஞரை தாக்கிய 3 பேர் கைது
- அங்குள்ள தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த சுவாரியிடம் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதுவது போல் வண்டியை நிறுத்தினர்
- அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுவாரியை 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை மத்திகிரி மிடுகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சுவாரி (வயது 25). போட்டோ கிராபர்.
மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சுவாரி நேற்று அந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த பழைய மத்திகிரியைச் சேர்ந்த கவுதம் (25), முரளி (21), ரஞ்சித்குமார் (20), அஜீத் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுவாரியிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானமப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பின்னர் அங்குள்ள தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த சுவாரியிடம் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதுவது போல் வண்டியை நிறுத்தினர். இதனால் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுவாரியை 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.
இதுகுறித்து சுவாரி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு ெசய்து முரளி, ரஞ்சித்குமார். அஜீத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள கவுதமை போலீசார் தேடிவருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்