search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகைப்பட கலைஞரை தாக்கிய 3 பேர் கைது
    X

    புகைப்பட கலைஞரை தாக்கிய 3 பேர் கைது

    • அங்குள்ள தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த சுவாரியிடம் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதுவது போல் வண்டியை நிறுத்தினர்
    • அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுவாரியை 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை மத்திகிரி மிடுகாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சுவாரி (வயது 25). போட்டோ கிராபர்.

    மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. சுவாரி நேற்று அந்த கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த பழைய மத்திகிரியைச் சேர்ந்த கவுதம் (25), முரளி (21), ரஞ்சித்குமார் (20), அஜீத் (21) ஆகிய 4 பேரும் சேர்ந்து சுவாரியிடம் வாய் தகராறில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் சமாதானமப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அங்குள்ள தியேட்டர் முன்பு நின்று கொண்டிருந்த சுவாரியிடம் 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து மோதுவது போல் வண்டியை நிறுத்தினர். இதனால் அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் சுவாரியை 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.

    இதுகுறித்து சுவாரி ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு ெசய்து முரளி, ரஞ்சித்குமார். அஜீத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    தலைமறைவாக உள்ள கவுதமை போலீசார் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×