search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரியில் அரிவாள்களுடன் 3 பேர் கைது
    X

    நாங்குநேரியில் அரிவாள்களுடன் 3 பேர் கைது

    • நாங்குநேரி பெரியகுளத்தின் தடுப்பு சுவரில் 3 பேர் அரிவாள்களுடன் இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசாரை பார்த்ததும் அவர்கள் அவமரியாதையாக திட்டினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் செல்வம் (வயது20), செல்லத்துரை மகன் வான்மகேஷ் (22), நாங்கு நேரியை சேர்ந்த மனோகரன் மகன் உமாபதி (25). இவர்கள் 3 பேரும் நாங்குநேரி பெரியகுளத்தின் தடுப்பு சுவரில் அரிவாள்களுடன் இருப்பதாக நாங்குநேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். இதில் 3 பேரும் அரிவாள்களை தீட்டிய படி இருந்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்களை அவமரியா தையாக திட்டினர். போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×