என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சின்னமனூர் சந்தையில் மளிகை பொருட்கள் திருடிய 3 பேர் கைது
- பாமாயில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
- போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்குரதவீதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(42). இவர் வாரச்சந்தையில் மொத்த வியாபாரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு தேவையான பொருட்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் அதனை சரிபார்த்த போது பாமாயில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட ரூ.5200 மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார்அளித்தார். போலீசார் விசாரணையில் ஜக்கம்மாள் கோவில் தெருவைேசர்ந்த அசோக்குமார்(32), 2-வது வார்டு பொன்னகரை சேர்ந்த அலெக்ஸ்(44), வடக்கு முஸ்லீம்தெருவை சேர்ந்த சேக்அஜ்மீர்(46) ஆகிய 3 பேரும் சேர்ந்து அதனை திருடியிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(29). இவர் அதேபகுதியில் விவசாயம் செய்து வருவதுடன் ஆடுமாடுகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். அதில் பசுமாடு, ஆட்டுகிடா ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைதிருடியது மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேஷ்பாண்டி, கம்பத்தை சேர்ந்த சதீஸ், விஜய், விஜிகுமார் என தெரியவந்தது. அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது கணேஷ்பாண்டி மற்றும் சதீஸ் தப்பிஓடிவிட்டனர். விஜிகுமாரை போலீசார் கைது செய்து பசுமாடு மற்றும் ஆட்டுகிடாவை பறிமுதல் செய்தனர். படுகாயமடைந்த விஜய் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்