என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காரைக்கால் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
- காரைக்கால் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காரைக்காலை அடுத்த நிரவி ஹேவெய்ஸ் நகரில், தடை செய்யப்பட்ட போதை புதையிலை பொருள்க ளான குட்கா, ஹான்ஸ், கூல்லிப் மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதாக நிரவி போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், ஹேவெய்ஸ் நகரில் ரவி (வயது47) என்பவரது வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வீட்டில் மறைத்து வைத்திருந்த, ரூ.60 ஆயிரம் மதிப்பிலான ஹான்ஸ், கூலிப் போன்ற போதை புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ரவியிடம் நடத்திய விசாரணையில், காரைக்கால் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜ்குமார் (27), நிரவி கீர்த்திகா நகரை சேர்ந்த சூர்யா (26) ஆகிய 3 பேரை கைது செய்து, காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்