search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே 21 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அருகே 21 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது

    • வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வீரக்கல் குரும்பபட்டி பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமை யில்,சப்-இன்ஸ்பெக்டர்கள் அழகுபாண்டி, பாலசுப்பிர மணியன், எஸ்.பி. தனிப்பிரிவு காவலர் வினோத் கண்ணன் மற்றும் பாலசுப்பிரமணியன், ரவி ச்சந்திரன், ஜெய ச்சந்திரன், செந்தில், சிவபெருமாள் ஆகியோர் கொண்ட போலீ சார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது சோலைக்காடு பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்தனர்.போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர்.போலீசார் தப்பி ஓடிய 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் காலாடிபட்டியைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 31),முருகன் (43),வீரக்கல் குரும்ப பட்டியைச் சேர்ந்த பிரபு (34) என்பதும் கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்காக வைத்திருந்த தும் தெரியவந்தது.

    இதை யடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களி டமிருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த வழக்கில் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய வட்டப்பாறையைச் சேர்ந்த செவ்வந்து (58), ராதா(38) ஆகிய 2 பெண்களை போலீ சார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×