என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது
- கம்பம் மெட்டுசாலை, கம்பம் பைபாஸ்சாலை சந்திப்பில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
- கஞ்சா கடத்தி வந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் மெட்டுசாலை, கம்பம் பைபாஸ்சாலை சந்திப்பில் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரளா நோக்கி வேகமாக சென்ற ஆட்டோவை மறித்து சோதனையிட்டனர்.
அதில் 5 கிலோ 550 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ஆட்டோவில் இருந்து ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்ற 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் கம்பம் கோம்பை சாலையை சேர்ந்த துரைப்பாண்டி மனைவி இந்திராணி (51). மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பூமிநாதன் (29), நாராயணதேவன்பட்டியை சேர்ந்த முத்தையா (39) என தெரியவந்தது.
மேலும் தப்பியோடிய நபர் அன்பரசன் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வரு கின்றனர். 3 பேரையும் உத்தமபாளையம் கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தினர். வாகன சோதனையில் திறமையாக செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே பாராட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்