என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்களை திருடிய 3 பேர் கைது
- வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
- மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சூடபுரம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (வயது52). பெயிண்டரான இவர் வேலைக்காக கடந்த 1-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வந்தார். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை பழையபேட்டையில் நிறுத்திவிட்டு ஒரு கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து அவர் வெளியே வந்துபார்த்தபோது வண்டியை காணவில்லை. இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
இதேபோன்று சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யகுமார் (22). இவர் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வந்தார். அப்போது அவர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஓட்டல் வெளியே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சாப்பிட சென்றார். வெளியே வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
இதுகுறித்து அவர் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ெதரிவித்தார். அடுத்தடுத்த கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்ததில் 2 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடியது தருமபுரி மாவட்டம் கொங்குவேம்பு பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்கள், அரூர் அருகே மதியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (19) ஆகிய 3 பேரும் சேர்ந்து 2 இடங்களில் திருடியது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து 2 சிறுவர்களை சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், பிரேம்குமாரை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும் அடைத்தனர்.






