search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

    • சம்மந்தப்பட்ட கோவிலுக்கு பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • அவர்களிடமிருந்த ரொக்கம் ரூபாய் 300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி கிராமத்தில் உள்ளது மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது சம்மந்தப்பட்ட கோவிலுக்கு பின்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பிடிபட்ட நபர்கள் நார்த்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த குப்பாகவுண்டன், கார்த்தி, வேடியப்பன் ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் மூன்று பேரையும் அதியமான்கோட்டை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த ரொக்கம் ரூபாய் 300-ஐ பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

    Next Story
    ×