search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
    X

    வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புவியரசனை இரும்பு கம்பி மற்றும் கைகளால் அடித்து தாக்கியுள்ளனர்.
    • போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஒட்டபட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவியரசன் (வயது 32). இவர் இவரது உறவினர் பெண்ணிடம் வீட்டின் அருகே நின்று கொண்டு பேசிகொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த நெடுங்கல் கிராமத்தை சேர்ந்த சண்முகம் (40), வெடிகோட்டை பகுதியை சேர்ந்த திருப்பதி (20), பேருஅள்ளியை சேர்ந்த இளங்குமரன் (29) ஆகிய மூன்று பேரும் புவியரசனை இரும்பு கம்பி மற்றும் கைகளால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் அவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து புவியரசன் காவேரிபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சண்முகம், திருப்பதி, இளங்குமரன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×