என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நிலக்கோட்டை அருகே கஞ்சா வியாபாரி 3 பேர் கைது
- நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஐ.ஜி.தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 3 பேரையும் கைது செய்து 3.300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஐ.ஜி.தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஐ.ஜி தனிப்படை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஆட்டோவில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் விராலிமாயன் பட்டியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 25), நிலக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (24), பெரியகுளத்தைச் சேர்ந்த கண்ணன் (25) என்பதும், ஆட்டோவில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஐ.ஜி தனிப்படையினர் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 3.300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்