search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே கஞ்சா வியாபாரி 3 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரிகள் 3 பேரை படத்தில் காணலாம்.

    நிலக்கோட்டை அருகே கஞ்சா வியாபாரி 3 பேர் கைது

    • நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஐ‌.ஜி.தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 3 பேரையும் கைது செய்து 3.300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குள்ளனம்பட்டி:

    நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக ஐ‌.ஜி.தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஐ.ஜி தனிப்படை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக ஆட்டோவில் வந்த 3 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள் விராலிமாயன் பட்டியைச் சேர்ந்த விக்ரமன் (வயது 25), நிலக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் (24), பெரியகுளத்தைச் சேர்ந்த கண்ணன் (25) என்பதும், ஆட்டோவில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் ஐ.ஜி தனிப்படையினர் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து விளாம்பட்டி இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 3.300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×