என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உள்பட 3 போலி டாக்டர்கள் சிக்கினர்
    X

    பெண் உள்பட 3 போலி டாக்டர்கள் சிக்கினர்

    • 15 ஆண்டுகளாக பேளகொண்டபள்ளியில் மருந்தகம் வைத்து போலி வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.
    • 3 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    ஓசூர் பகுதியில், மருத்துவம் படிக்காமல், போலி டாக்டர்கள் வைத்தியம் பார்த்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றன.

    இதையடுத்து, மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பரமசிவன் அறிவுறுத்தலின்படி, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞானமீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்துக்கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி, வருவாய்த்துறையினர் மற்றும் மத்திகிரி போலீசார், ஓசூர் அருகே பேளகொண்டபள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது மருந்தகம் வைத்து, போலியாக வைத்தியம் செய்து வந்த ஷானிமா (24) என்ற பெணலி டாக்டர் மற்றும் சவுகத் அலி (46) ஆகியோரது மருந்தகங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    இதில், ஷானிமா கஜகஸ்தானில் மருத்துவம் படித்துவிட்டு, இந்தியாவில் தகுதித்தேர்வு எழுதாமல் கடந்த 1 ஆண்டுகளாக பேளகொண்ட பள்ளியில் வைத்தியம் பார்த்து வந்தது தெரியவந்தது.

    இதேபோல், ஓசூர் ெரயில்வே நிலைய பகுதியை சேர்ந்த சவுகத் அலி, பார்மசி படிப்பு படித்து, கடந்த 15 ஆண்டுகளாக பேளகொண்டபள்ளியில் மருந்தகம் வைத்து போலி வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

    மேலும், ஓசூர் அருகே கொத்த கொண்டபள்ளியில், சீனிவாஸ் (33) என்பவர் மருந்தகமும், உள்ளே 3 படுக்கை கொண்ட கிளினிக்கையும் வைத்து வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

    இதையடுத்து 3 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.மேலும், அவர்களின் மருந்தகத்தில் இருந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 மருந்தகங்களும் சீல் வைக்கப்பட்டது.

    Next Story
    ×