search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம்
    X

    தஞ்சையில் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம்

    • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது
    • மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் .

    தஞ்சாவூர்:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார்.

    நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் முத்துஉத்ராபதி விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் மணிப்பூர் மாநில கலவரத்தை கட்டுப்படுத்த தவறியது,

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது போன்ற மக்கள் விரோத மத்திய பாஜக அரசை கண்டித்து.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு செப்டம்பர் 12,13 ,14 ஆகிய மூன்று தேதிகளில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த விடுத்த அழைப்பினை ஏற்று தஞ்சை மாவட்டத்தில் மூன்று நாட்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்த வேண்டும் .

    இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வீரமோகன், சேவையா, திருநாவுக்கரசு, கோவிந்தராஜன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×