search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ. 11.24 கோடி கல்வி உதவித் தொகை
    X

    கடலூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் மாணவர்களுக்கு ரூ. 11.24 கோடி கல்வி உதவித் தொகை

    • இதுவரை 22,032 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.
    • பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 65 நபர்களுக்கு ரூ. 6.9 இலட்சம் மதிப்பீட்டில் பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின் பேரில் கடலூர் மாவட்டத்தில் 32 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள், 35 மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகள் மற்றும் 1 சிறுபான்மையினர் நல விடுதி என ஆககூடுதல் 68 விடுதிகள் இயங்கி வருகின்றது. இவற்றில் 3044 மாணவர்கள் மற்றும் 1681 மாணவியர்கள் என ஆக மொத்தம் 4725 மாணவ, மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். அவ்வகையில் கல்வி உதவித்தொகை திட்டங்கள் வாயிலாக சிறுபான்மை யினர் கல்வி உதவித்தொ கைத் திட்டத்தின் கீழ் கடந்த 2021-22 -ம் ஆண்டில் 12146 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் உதவித் தொகைகள் வழங்கப்ப ட்டுள்ளன. மேலும், 2022-23 -ம் ஆண்டிற்கு 5655 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 27,113 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 11.24 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

    கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டத்தின் கீழ் மிகப்பிற்டுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த 3 முதல் 6ம் வகுப்பு வரை பயிலும் பெண் குழந்தைகளுக்கு இதுவரை 22,032 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 1.37 கோடி மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்ப ட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த 13,095 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 6.41 கோடி மதிப்பீட்டில் மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த வர்களுக்கு 43 ேபர்களுக்கு ரூ. 2,39,940 மதிப்பீட்டில் விலையில்லா தையல் எந்திரங்கள் மற்றும் 56 ேபர்களுக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்புப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

    பொருளாதார கடனுதவித் திட்டங்கள் வாயிலாக, தமிழ்நாடு சிறுபா ன்மையினர் பொரு ளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் வகுப்பைச் சார்ந்தவ ர்களுக்கு 977 ேபர்களுக்கு ரூ. 4.25 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பிற்படுத்தப்ப ட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்தவ ர்களுக்கு 1775 நபர்களுக்கு ரூ. 11.43 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு 65 நபர்களுக்கு ரூ. 6.9 இலட்சம் மதிப்பீட்டில் பொருளாதார கடன் வழங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் மாவ ட்ட த்தில் பொரு ளாதாரத்தில் பின்தங்கி யுள்ள முஸ்லிம் பிரிவைச் சார்ந்த மகளிர்களுக்கு 322 ேபர்களுக்கு ரூ. 43.28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×