என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 27 பேர் கைது
- புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கஞ்சா விற்ற ஓசூர், பாகலூர், சூளகிரி, அஞ்செட்டி பகுதிகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக், பான்மசாலா ஆகியவை விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினார்கள். இதில் ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர், பர்கூர், நாகரசம்பட்டி, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், பேரிகை, பாகலூர், சூளகிரி, தளி, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3,200 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா வைத்திருந்தததாக ஓசூர், பாகலூர், சூளகிரி, அஞ்செட்டி பகுதிகளை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் எங்கும் லாட்டரி விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் கண்காணத்தனர்.
அந்த வகையில் லாட்டரி விற்பனை செய்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள குருகப்பட்டி அப்துல் மஜித் (36), ராயக்கோட்டை ராஜீவ்காந்தி நகர் மாரியப்பன் (48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.900 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.






