search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    24-ந்தேதி தொடங்குகிறதுஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைப்புப் பணிகள்
    X

    24-ந்தேதி தொடங்குகிறதுஏற்காடு மலைப்பாதையில் சாலை சீரமைப்புப் பணிகள்

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி வரும் 24-ந்தேதி( திங்கட்கிழமை) முதல் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்களுக்கு சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியாக 2 சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    இதர இலகு ரக மற்றும் கன ரக வாகனங்கள் மாற்று வழியாக அயோத்தியாப் பட்டணம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலையினை ஏற்காடு செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்குறிப்பிட்ட நாட்களில் குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்லும்

    அனைத்து வாகனங்க ளுக்கும் சுங்க கட்டணத்தி லிருந்து விலக்கு அளிக்கப் படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×