search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் தலைமையில் வருகிற 21-ம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு
    X

    கலெக்டர் அருண்தம்புராஜ்

    கலெக்டர் தலைமையில் வருகிற 21-ம் தேதி பள்ளி வாகனங்கள் ஆய்வு

    • 43 பள்ளி நிறுவனங்களுக்கு சொந்தமான 120 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
    • அரசு ஆணைப்படி முதலுதவி பெட்டி, தீயணைப்பு உபகரணங்கள், அவசர கதவு, வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா, மற்ற வசதிகளும் இருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் வரும் 21ம் தேதி மாவட்டத்திலுள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலரும் சேர்ந்து 43 பள்ளி நிறுவனங்களுக்கு சொந்தமான 120 பள்ளி வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஆணைப்படி ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆய்வு பணியில் ஆர்.டி.ஓ, மாவட்ட காவல் துணை சூப்பிரண்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்ய உள்ளனர். அரசு ஆணைப்படி மஞ்சள் நிறத்திலும், முதலுதவிப் பெட்டி, படிக்கட்டு வசதி, தீயணைப்பு உபகரணங்கள், அவசர கதவு, குழந்தைகள் அமர்வது, பேக்குகள் வைக்க இடம், வேக கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா, மற்ற வசதிகளும் இருக்க வேண்டும்.

    இவை இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மோட்டார் வாகன அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார். ஆய்வு பணிக்கு வராத பள்ளி வாகனங்கள் பொது சாலையில் பள்ளிக் குழந்தைகளை வைத்து இயக்கினால் வாகனம் சிறை பிடிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    Next Story
    ×