என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
10 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்4 Jun 2022 7:54 AM GMT (Updated: 4 Jun 2022 7:54 AM GMT)
மதுரையில் ரெயில்வே அதிகாரி மனைவியிடம் 10 பவுன் நகை பறித்த மோட்டார் சைக்கிள் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை சம்மட்டிபுரம், தில்லை நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தென்னக ரெயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 57). நேற்று இரவு இவர் சம்மட்டிபுரம் அருகே நடந்து சென்றார்.
அப்போது அவரது அருகில் ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர். மகேஸ்வரி தியேட்டர் அருகே நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் மகேஸ்வரி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இதுகுறித்து மகேஸ்வரி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை துரைசாமி நகர்,ஷாலினி தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 66). இவர் நேற்று இரவு துரைசாமி நகர் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், முதியவரிடம் இருந்து செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எஸ்.எஸ்.காலனியில் ஒரேநேரத்தில் 2 பேரிடம் தங்கச்சங்கிலி மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X