search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கடலூர் அருகே மனைவி கோபித்து சென்றததால் கணவன் தற்கொலை

    கடலூர் அருகே குடும்ப தகராறில் மனைவி கோபித்து சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே நடுவீரப்பட்டு தட்டார சாவடி சேர்ந்தவர் கணேச மூர்த்தி (வயது 44). இவருக்கும், இவரது மனைவி விஜயாவுக்கும் குடும்ப தகராறு காரணமாக சம்பவத்தன்று சண்டை வந்தது. இதனால் கோபமடைந்த விஜயா தனது தாய் வீட்டுக்கு சென்று உள்ளார்.

    இதன் காரணமாக கணேசமூர்த்தி திடீரென்று தன் வீட்டில் இருந்த மண்எண்ணையை  தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் காயமடைந்த கணேச மூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசமூர்த்தி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×