search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளா அரசின் சார்பில் புதிய பேருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்த காட்சி.
    X
    கேரளா அரசின் சார்பில் புதிய பேருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வந்த காட்சி.

    ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு கேரளா அரசின் பேருந்து சேவை தொடக்கம்

    தமிழகத்தின் சுற்றுலா தலமான ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு கேரளா அரசின் பஸ் சேவை தொடங்கி உள்ளது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இஸ்லாமி–யர்களின் புனித தலமாகவும் விளங்குவது ஆத்தங்கரை பள்ளிவாசல்.

    இப்பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாரந்தோறும் சுற்றுலா பயணமாகவும், நேர்த்திக்கடன்கள் செலுத்து–வதற்காகவும் வருவது வழக்கம்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் தனி கார் மூலமாகவோ அல்லது நாகர்கோவில், நெல்லை போன்ற பகுதிகளுக்கு வரும் பேருந்துகளில் ஒவ்வொரு பேருந்தாக மாறி வாழும் சூழ்நிலை இருந்து வந்தது.

    நேரடியாக கேரளாவில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு பேருந்து வசதி இல்லாமல் இருந்தது.

    சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் கவனத்தை கருத்தில் கொண்டு கேரள அரசு கேரள மாநிலம் ஹரிப்பாடு பகுதியிலிருந்து கொல்லம், திருவனந்த–புரம், களியக்காவிளை, தக்கலை, நாகர்கோவில், சுசீந்திரம், கூடங்குளம் வழியாக ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு வரும் வகையில் புதிய பேருந்து வசதியை தொடங்கியுள்ளது.

    இப்பேருந்து கேரளாவில் இருந்து காலை 5. 20 மணிக்கு புறப்பட்டு 12.10மணிக்கு ஆத்தங்கரை பள்ளிவாசலை வந்தடைகிறது.

    மீண்டும் இப்பேருந்து மதியம் 3.10 மணிக்கு ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு இரவு 9. 55 மணிக்கு கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியை சென்றடைகிறது.

    தமிழகத்தின் சுற்றுலா தளத்திற்கு நேரடியாக வரும் வகையில் கேரளா அரசின் பேருந்து சேவைக்கு பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×