search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்பிக் நகரில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.
    X
    ஸ்பிக் நகரில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கிய காட்சி.

    கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பிக்நகரில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பிக்நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்பிக் நகர் பகுதி கழகம் சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
     
    நிகழ்ச்சியில் மாநில தி.மு.க. மாணவரணி உமரிசங்கர், மாவட்ட கவுன்சிலர் வக்கீல் முள்ளக்காடு செல்வகுமார், ஸ்பிக் நகர் பகுதி  தி.மு.க. செயலாளர்  பொன்னரசு, 58-வது வட்டம் கருப்பசாமி, நிர்வாகிகள் சுப்பிரமணியன், மைக்கேல்ராஜ், மரியகிராஜன், அந்தோணிராஜ், எஸ்.ஆர். ஜெ.அருண் குமார், கே.பி.ஆர்.ராஜ், திருமணி ஆனந்த், மாநகராட்சி கவுன்சிலர்கள் 58-வது வார்டு பச்சிராஜ், 55-வது வார்டு ராஜதுரை, அத்திமரப்பட்டி பால்பாண்டி நாடார், தங்கராஜ், கல்பனா, வசந்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×