என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வரும் காட்சி.
ஆற்றில் குதித்து பெண் தற்கொலை
சுண்ணாம்பாற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே நோணாங்குப்பம் பகுதியில் சுண்ணாம்பாறு உள்ளது.
இந்த ஆற்றின் குறுக்கே 2 நீண்ட பாலங்கள் அமைந்து உள்ளது. இதில் உள்ள பழைய பாலத்தின் மீது ஏறி நின்று இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த அந்த இளம் பெண்ணின் உடலை கண்டு அங்கு கட்டு மரத்தில் மீன்பிடிப்பவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் மற்றும் புதுவை தீயணைப்புத் துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த கட்டுமரத்தின் உதவியோடு உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தவளக்குப்பம் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்?. இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தற்கொலை சம்பவம் நடந்ததால் 2 பாலத்தின் மீது ஏராளமானோர் கூடி நின்று வேடிகை பார்த்தனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story






