என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காங்கிரசில் ஊழல் செய்யாதவர்களே இல்லை- பா.ஜனதா தலைவர் பேட்டி
Byமாலை மலர்3 Jun 2022 6:47 AM GMT (Updated: 3 Jun 2022 6:47 AM GMT)
காங்கிரசில் ஊழல் செய்யாதவர்களே இல்லை என பா.ஜனதா தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
60 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் செய்ய முடியாததை 8 ஆண்டில் பிரதமர் மோடி செய்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. உலகம் போற்றும் தலைவரக மோடி மாறியுள்ள்ளார்.
8 ஆண்டில் ஊழல் இல்லாத அரசை மக்கள் பார்த்து வருகின்றனர். எல்லா மாநிலங்களையும் ஒரேமாதிரியாக பாவித்து திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறது.
ஊழல் இல்லாத இந்தியா, குடிநீர், உணவு, சொந்த வீடு போன்ற திட்டங்களுக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறார்.
பிரதமரின் சாதனைகளை விளக்கி மக்கள் இயக்கமாக தெருமுனை பிரசாரம் செய்து வருகிறோம். நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு என பஞ்சபூதங்களிலும் காங்கிரஸ் அரசு ஊழல் புரிந்தது. பிரதமரின் டிஜிட்டல் முறையால் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் 140 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாடு வளர்ச்சியை நோக்கி வீறுநடை போடுகிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு எவ்வளவு சொத்து உள்ளது? அவரின் மகன் என்ன தொழில் செய்கிறார்?
கடந்த தேர்தல்களில் அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது? என சொல்ல முடியுமா? காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கவில்லையா? காங்கிரஸ் கட்சியில் ஊழல் செய்யாதவர்களே இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது பொதுச்செயலாளர் மோகன்குமார், பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், துணைத்தலைவர்கள் அமாவாசை, கஜேந்திரன், செயலாளர் நாகராஜன், பொருளாளர் சிவபெருமான் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X