என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
போக்குவரத்து கழக எழுத்தர் மீது தாக்குதல்
புதுவை அரசு போக்குவரத்து கழக எழுத்தரை தாக்கியதாக கண்டக்டர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முத்திரையர்பாளையம் கோவிந்தன்பேட்டை நெல்லுமண்டி வீதியை சேர்ந்தவர் பாவாடை (வயது52). இவர் புதுவை அரசு போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) இளநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது அலுவலக பொது மேலாளர் ஏழுமலையுடன் அலுவக கோப்புகளை எடுத்துக்கொண்டு புதுவை 100 அடி ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அலுவலக வேலைகளை முடித்துக்கொண்டு இரவு 8 மணியளவில் பாவாடையும், பொது மேலாளர் ஏழுமலையும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரியும் லோகையன் (54) என்பவர் பாவாடையை வழி மறித்து தகாத வார்த்தைகளால் திட்டி நிலுவை தொகைக்கு ஏன் பில் போடவில்லை என கூறி கன்னத்தில் அறைந்தார். அப்போது பொது மேலாளர் ஏழுமலை தடுத்த போதும் அதனையும் மீறி பாவாடையை தாக்கிய லோகையன் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து பாவாடை முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரில் தன்னை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த லோகையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






