என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியர்களின் ஆசியுடன் பிரியா விடை பெற்ற மாணவர்கள்
Byமாலை மலர்2 Jun 2022 8:31 AM GMT (Updated: 2 Jun 2022 8:31 AM GMT)
வேதாரண்யத்தில் பிளஸ்-2 மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கு வர்ணம் தீட்டி ஆசிரியர்களின் ஆசியுடன் பிரியா விடை பெற்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 301 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் இந்த ஆண்டு பிளஸ்2 வகுப்பில் 58 மாணவ- மாணவிகள் படித்து தேர்வு எழுதி உள்ளனர்.
இந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்து மாணவ, மாணவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தலா ரூ.300 வீதம் அளித்து ரூ.15,000 சேகரித்தனர்.
இந்த தொகையில் தாங்கள் படித்த பள்ளியில் 2 வகுப்பறைகளுக்கு புதிதாக மாணவ-மாணவிகளே பெயிண்ட் அடித்து சுவர்களில் திருக்குறளையும் எழுதி புதுப்பொலிவு பெறச் செய்தனர்.
்மேலும் தங்களுக்கு பாடம் நடத்திய அனைத்து ஆசிரிர்்களுக்கும் பாராட்டு விழா நடத்தினர். விழாவிற்கு மாணவி மணிபாரதி தலைமை தங்கினார். மாணவன் ராஜதுரை வரவேற்றார்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்தர்மதுரை, பொரு ளாளர் ராமலிங்கம்,தலைமை யாசிரியர் பெருமாள், ஆசிரியர்கள் மதிவாணன், வடிவேல், வேம்பையன், கலை இலக்கிய பெருமன்ற நாகை மாவட்ட செயலாளர் அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவி களை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.தற்போது பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்ச், நாற்காலிகளை உடைப்பதும், ஆசிரியர்களை அடிக்க செல்வதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. இதனால் பெற்றோர் மட்டுமல்லாது அனைத்து தரப்பிலும் இச்சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறையை தூய்மைப்ப டுத்தியும், வண்ணம் தீட்டி, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அவர்களின் ஆசியுடன் பிரியா விடை பெற்ற சம்பவம் அனைத்து தரப்பிலும் பாராட்டுறையை பெற்றள்ளது. தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.
பாராட்டு விழா நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், ஆசிரியர்கள் மற்றுகிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X