search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிர்வாகிகள் கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் அக்ரி கணேசன் பேசினார்.
    X
    நிர்வாகிகள் கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் அக்ரி கணேசன் பேசினார்.

    ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட கோரிக்கை

    மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    மதுரை

    மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் கே.கே.நகர் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்  அண்ணாநகரில் பகுதி செயலாளர் அக்ரி கே.பி.டி.கணேசன் முன்னிலையில் நடைபெற்றது. அவைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். 

    இக்கூட்டத்தில் 10 வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.


    இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-


    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை (3-ந் தேதி) அனைத்து வட்டங்களிலும் கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு கலைஞர் பஸ் நிலையம் என பெயர் சூட்ட வேண்டும். இதற்காக மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 


    மதுரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நகர் கே.கே.நகர் என அழைக்கப்படுகிறது. இதற்கு அரசாணை பெற வேண்டும். 


    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு கலைஞர் ரெயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மதுரை வேளாண்  கல்லூரியை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தும் போது அதற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×