search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் குஞ்சரமூர்த்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சபீர்முகை தீன். அவரது மகன் ரியாஸ் (வயது 24). பட்டதாரி வாலிபர். இவருக்கு குடிபழக்கம் உண்டு.

    இவர் தினசரி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். எனவே பெற்றோர் ரியாசை கண்டித்தனர். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த ரியாஸ் தனது பெற்றோரிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

    இதனால் மனமுடைந்த ரியாஸ் வீட்டில் உள்ள அறைக்கு சென்று பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரது நண்பர்களுக்கு தெரிவித்தனர்.

    அப்போது ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, ரியாஸ் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து உடனடியாக சிதம்பரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்தனர். தூக்கில் தொங்கிய ரியாசை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரியாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×