search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    மாற்றுத்திறனாளி பெண்ணை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம்- டெய்லர் கைது

    திருப்பூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் டெய்லரை பெண்கள் வன்கொமை சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (30), இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து திருப்பூர், திருமுருகன்பூண்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மே நகரில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று மதியம் மணிகண்டன், 22 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை தனது வீட்டின் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சத்தம் கேட்டு பெண்ணின் உறவினர்கள் மணிகண்டனை பிடித்து தர்ம அடி கொடுத்து திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமுருகன்பூண்டி போலீசார் மணிகண்டனை வடக்கு அனைத்து மக ளிர் போலீஸ் நிலையத் திற்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், வடக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை பெண்கள் வன்கொமை சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
    Next Story
    ×