என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்த சாக்கப்பா
சூளகிரி அருகே குடும்ப தகராறில் விபரீதம்: குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்து தொழிலாளி சாவு
சூளகிரி அருகே குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் குடித்த தந்தை உயிரிழந்தார்.
சூளகிரி.
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா சூளகிரி அருகே உலகம் கிராமத்தை சேர்ந்த சாக்கப்பா (வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கும் அருகே உள்ள மேடு பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜே ஸ்வரிக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.
வர்களுக்கு இரண்டு குழந்தைகள். பிரவின் (வயது 9), தேவஸ்தனா (வயது 7). இந்த நிலையில் 27- தேதி கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.மனைவி கோபித்துக்கொண்டு மேடு பள்ளி தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.
பிரவின் உறவினர் உடன் வெளியில்இ சென்றுவிட்டான். சாக்க ப்பவும்,மகளும் மாட்டு தனியே இருந்த சூழலில் மதுவில் விஷம் கலந்து குடித்த சாக்கப்பா அதை மகளுக்கும் கொடுத்துள்ளார்.
இந்த நேரத்தில் மன கஷ்டத்தில் இருந்த சாக்கப்பா மதுபானத்தல் விஷம் கலந்து சாக்ப்பா குடித்துவிட்டு மகளுக்கு கொடுத்தார்.
மயக்க நிலையில் இருந்த வர்களை அக்க பக்க த்தவர்கள் மீட்டு குழந்தையை பெங்களுர் மருத்து மனைக்கும், தந்தையை கிருஷ்ணகிரி அரசு மருத்து வமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
அதில் தந்தை சாக்கப்பா சிகிச்சை பலன் இன்றி இறந்தார். குழந்தை தேவஸ்தனா உயிருக்கு போராடி வருகிறது. இதை அறிந்த சூளகிரி போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






