search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன் அரிசி
    X
    ரேசன் அரிசி

    ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 4 டன் ரேசன் அரிசி பறிமுதல்

    ஆந்திராவுக்கு லாரியில் கடத்திய 4 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் சென்னையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளுர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தராம்பாள் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி உஷா மற்றும் போலீசார் திருவள்ளூர்-திருத்தணி சாலையில் நாராயணபுரம் கூட்ரோடில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 4 டன் ரேசன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தி வந்த சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பெத்தராமன், சரவணன், மதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஓட்டல்களுக்கும், டிபன் கடைகளுக்கும் விற்பனை செய்ய அரக்கோணம் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் ரேசன் அரிசியை வாங்கிக்கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து பெத்தராமன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட 4 டன் ரேஷன் அரிசியை திருவள்ளூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×