search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கொளத்தூரில் என்ஜினீயர் தற்கொலை

    கொளத்தூரில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    கொளத்தூர் அடுத்த செந்தில் நகர் பஸ் நிலையம் அருகில் வசித்து வந்தவர் சாய் கோவிந்த் (வயது29). என்ஜினீயரான இவர் வேளச்சேரியில் உள்ள ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஆகும். இந்தநிலையில் இன்று காலை வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்குபோராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சாய் கோவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சாய் கோவிந்தின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரிந்தது. இதனால், கடும் மன அழுத்தத்தில் இருந்த சாய் கோவிந்த் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    Next Story
    ×