என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டி மீனவ மக்கள் கோரிக்கை

    இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நாகை மீனவர்களின் விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டி முதல்-அமைச்சரிடம் மீனவ மக்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 

    இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடி இருந்த மீனவ பெண்கள் முதலமைச்சரை சந்தித்துமனு அளிக்க முயற்சித்தனர்.ஆனால் பாதுகாவலர்கள் அவர்களை விட மறுத்ததால் அந்தப் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். 

    இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவப் பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட நாகை மீனவர்களின் படகுகளை மீட்டுத்தர வேண்டும் என மீனவ பெண்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கண்ணீர் மல்க காலில் விழுந்து கோரிக்கை விடுத்தனர். 

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மீனவ பெண்களிடம் உறுதி அளித்தார்.
    Next Story
    ×