என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வரத்து 385 கனஅடியாக குறைந்தது
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீர் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கேற்ப செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அதன்படி ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
அதன்படி கடந்த 5-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்தத் தண்ணீர் 8-ந்தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்று இரவே பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.
கண்டலேறு அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் திறக்கப்பட்டு உள்ளது.
ஆனால் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரிக்கு வருவது தற்போது குறைந்து உள்ளது.
கடந்த வாரத்தில் 650 கனஅடிவரை வந்த தண்ணீர் வரத்து தற்போது 385 கனஅடியாக குறைந்து உள்ளது. ஆந்திரா பகுதியில் விவசாயிகள் கிருஷ்ணா தண்ணீரை எடுப்பதே தண்ணீர் வரத்து குறைந்ததற்கு காரணம் என்று தெரிகிறது.
ஆந்திரா விவசாயிகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டே கிருஷ்ணா நீர் முன்னதாக பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே ஆந்திரா விவசாயிகள் தண்ணீர் எடுப்பது குறைந்ததும் கிருஷ்ணா நீர் முழுமையாக பூண்டி ஏரிக்கு வந்தடையும்.
மேலும் கண்டலேறு அணையில் போதுமான தண்ணீர் இருப்பதால் பூண்டி ஏரிக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடி. தற்போது ஏரியில் 1143 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 385 கன அடி தண்ணீர் வழங்கப்படுகிறது.
ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 841 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்