என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்த தானம் வழங்கிய காட்சி.
    X
    ரத்த தானம் வழங்கிய காட்சி.

    ரத்த தான முகாம்

    சாரதா கங்காதரன் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து இலவச ரத்ததான முகாமை நடத்தியது. 

    கல்லூரியின் முதல்வர் உதயசூரியன், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் சித்ராதேவி, துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர். 

    ரத்ததான முகாமில் பேராசிரியர்கள் மாணவர்கள் உள்பட 57 பேர் ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து அதிக அளவில் ரத்ததான முகாமினை நடத்திவரும் இந்த கல்லூரியின் சேவையினைப் பாராட்டி புதுவை  இந்திராகாந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி  2019-2021-ம் ஆண்டிற்கான பாராட்டுச் சான்றிதழை வழங்கியுள்ளார்.  

    கல்லூரியில் முதுகலை படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் வணிகவியல் மாணவர் பிரேம்குமார் தொடர்ந்து 10 முறை ரத்ததானம் வழங்கி உள்ளார். 

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, இணை ஒருங்கிணைப்பாளர் கணேஷ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மரியசெல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×