search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சேத்தியாத்தோப்பு அருகே அரிசி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அரிசி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வத்தராயன்தெத்து கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு, அரிசி வியாபாரி.
    இவரது மகன் செல்வ தீபக் (வயது 24). இவரும் அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவர்களது வீடு சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவில் உள்ளது.

    நேற்று வீட்டில் இருந்த செல்வதீபக் தனது தந்தையிடம் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று கேட்டார். ஆனால், செல்வராசு இன்னும் சில வாரங்கள் போகட்டும் அதன் பின்னர் தொழில் தொடங்க பணம் தருவதாக கூறினார். இதனால் மனம் உடைந்த செல்வதீபக் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த செல்வராசு கதறி துடித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். செல்வதீபக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×