search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    4-வது குடிநீர் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு

    3 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து வர வேண்டிய நிலை உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தில் 4வது குடிநீர் திட்டப்பணி ரூ. 1,121 கோடி செலவில் 2017 -18ம் நிதியாண்டில் துவங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் பவானி ஆற்றிலிருந்து குடிநீர் எடுத்து அன்னூர் அருகே குறுக்கபாளையத்தில் தலைமை சுத்திகரிப்பு மையத்தில் சுத்திகரிப்பு செய்து, ராட்சத குழாய்கள் மூலம் திருப்பூர் கொண்டு வரப்படுகிறது.

    தற்போது சுத்திகரிப்பு மையம் கட்டுமானம் மற்றும் கருவிகள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதற்காக 196 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

    அது வரை, 20 கி.மீ., தூரத்துக்கு பிரதான குழாய்கள் பதித்தும், அங்கிருந்து ஏறத்தாழ, 150 கி.மீ., நீளத்துக்கு குழாய் பதித்தும் மேல் நிலை தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது.

    அவ்வகையில் மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளது. மேலும் 1,062 கி.மீ., நீளத்துக்கு நகரப்பகுதியில் வினியோக குழாய்கள் பதிக்கும் பணி பெரும்பாலும் முடிவடையும் நிலையில் உள்ளது.

    இத்திட்டம் பயன்பாட்டுக்கு வரும் நிலையில் தினமும் 230 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். இதனால், மாநகராட்சி பகுதியில் ஏறத்தாழ 1.2 லட்சம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். 

    இத்திட்டப்பணி தற்போது 75 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளது. பிரதான குழாய்கள் பதிக்கப்படும் இடங்களில் 3 இடங்களில் ெரயில்வே பாதையையும், 3 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையையும் கடந்து வர வேண்டிய நிலை உள்ளது. இதற்கு அனுமதி பெற தாமதம் ஏற்பட்டது.

    தற்போது இதில் அனுமதி கிடைத்துள்ளதால் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளன. அவ்வகையில் மேட்டுப்பாளையத்தில் ரெயில்வே பாதையை கடக்கும் இடத்தில் மற்றும் சுத்திகரிப்பு மையத்தில் நடைபெறும் பணியையும் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

    Next Story
    ×