என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
சங்கரன்கோவிலில் பெற்றோர் திட்டியதால் வாலிபர் தற்கொலை
சங்கரன்கோவிலில் பெற்றோர் திட்டியதால் வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் உரக்கடை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் பிரமுத்து(வயது 21). இவர் 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, கட்டிட வேலைக்கு சென்றுவந்தார். கடந்த 23-ந்தேதி அவர் திடீரென விஷம் குடித்தார். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.
இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கடந்த சில நாட்களாக பிரமுத்து வேலைக்கு சென்றுவிட்டு இரவில் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது தாயார் மாரியம்மாள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பிரமுத்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள நகரம் உரக்கடை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் பிரமுத்து(வயது 21). இவர் 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, கட்டிட வேலைக்கு சென்றுவந்தார். கடந்த 23-ந்தேதி அவர் திடீரென விஷம் குடித்தார். நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.
இதுதொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கடந்த சில நாட்களாக பிரமுத்து வேலைக்கு சென்றுவிட்டு இரவில் மிகவும் தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது தாயார் மாரியம்மாள் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் பிரமுத்து யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






